Tamil cricket news
தனது திறமையின் மூலம் தேர்வு குழுவுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை அடிக்க, இந்திய அணி 240 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. இதற்கு காரணம் சஞ்சு சாம்சனின் ஆட்டம் தான். கடின இலக்கை துரத்திய இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது வந்த சஞ்சு சாம்சன், பொறுப்புடன் இந்திய அணியை கடைசி வரை அழைத்துச் சென்றார்.