Tamil cricket news
அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் 11 வருடங்கள் தோனியே கேப்டனாக இருந்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடும் ஒப்படைப்பதாக கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஜடேஜா, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணிக்கிறார். ஆகையால் இவரும் நன்றாக கேப்டன் பொறுப்பை வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அப்படியே மாற்றாக எட்டு போட்டிகளில் ஆறில் தோல்வியை தழுவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு சிக்கலானது. முதல் எட்டு போட்டிகளுக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜடேஜா பகிரங்கமாக அறிவித்தார். மகேந்திர சிங் தோனி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு வழி நடத்தினார்.