Tamil cricket news
இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு ஆச்சரியமளிக்கிறது - கவுதம் கம்பீர்!
பெர்த் நகரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். இதனால் இந்திய அணி தனது பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக அக்சர் பட்டேலை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை பிளேயிங் லெவனில் சேர்த்தது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.