Tamil cricket news: Cricket News & Match Updates
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸின் உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் நடப்பு சீசன் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்டார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள அவர், தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றும் தேசிய கிரிக்கெட் அகாடமில் தெரிவித்துள்ளது. Read More...