Advertisement
Advertisement

Tamil cricket news

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா!
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?

By Bharathi Kannan May 14, 2024 • 15:35 PM View: 94

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவரும் இந்திய அணி இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த அணிக்கு துணைக்கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது பிசிசிஐ. இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Related Cricket News on Tamil cricket news