Tamil cricket news
சிஎஸ்கே முகாமிலிருந்து வெளியேறி முஸ்தஃபிசூர்; தோனி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 8 வெற்றிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள இடங்கள் எந்தெந்த அணிகள் பிடிக்கும் என்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் ருதுராஜ் கெய்க்வட் தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய 5 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. மேலும் இத்தொடரில் இனிவரும் நான்கு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தான் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்திருந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் தற்போது தாயகம் திரும்பியுள்ளர்.