Eng vs ind 3rd odi: Cricket News & Match Updates
என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் - ரிஷப் பந்த்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் (125* ரன்கள்), ஹர்திக் பாண்டியா (71 ரன்கள், 4 விக்கெட்) எடுத்து அசத்த, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்டும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியாவும் கைப்பற்றினர்.
போட்டி முடிவுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்திக் பண்டியா, ''எனக்கு ஷார்ட் பந்துகள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் ஒரு விக்கெட் வீழ்த்துவது 6 சிக்ஸர்கள் அடிப்பதற்கு சமம். ஒரு பவுலராக நான் வெட்கமற்றவன் என்று நான் எப்போதும் உணர்கிறேன். நான் எவ்வளவு தூரம் அடிபட்டாலும் கவலைப்பட மாட்டேன். ரிஷப் பண்டின் திறமையை நாங்கள் அனைவரும் அறிவோம். இறுதியாக இன்று அவர் நல்ல சூழ்நிலையில் விளையாடினார். பார்ட்னர்ஷிப் எங்களது ஆட்டத்தை மாற்றியது. ரிஷப் பண்ட் ஆட்டத்தை முடித்த விதமும் சிறப்பு" என்று தெரிவித்தார். Read More...