Delhi capitals: Cricket News & Match Updates
ஐபிஎல் அனுபவம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் முன்னதாக ஏப்ரல் 26ஆம் தேதியே டெல்லி அணியின் மூத்த பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருக்கு கரோனா பாதித்ததால் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறினார்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஐபிஎல் அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் இருக்கும் பகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கரோனா பாதித்தது. என்னுடைய சகோதரர்கள் கூட கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நான் ஐபிஎல் தொடரின் போது பத்து நாட்களாக தூங்கவில்லை. தூக்கமின்றி போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் நான் ஐபிஎல் தொடரில் இருந்து இருந்து விலகலாம் என முடிவெடுத்தேன். Read More...