Ipl 2021 in uae
ஐபிஎல் 2021 : சென்னை டூ யுஏஇ; அலர்ட் கொடுத்த சிஇஓ!
ஐபிஎல் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியம் உள்ளிட்ட வீரர்களுக்கு கரோனா உறுதியானதால் இத்தொடரின் எஞ்சிய 31 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் கரோனா அதிகரித்துக் காணப்படுவதால், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 31 போட்டிகளை 27 நாட்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இதனால், முதல் போட்டியே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on Ipl 2021 in uae
-
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Apr 2026 09:02
-
- 31 Mar 2026 09:50