India vs sri lanka: Cricket News & Match Updates
இந்த வெற்றி எங்களுக்கு சவாலாக இருந்தது - ரோஹித் சர்மா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சூப்பர் ஃபோர் சுற்றுப்போட்டியானது நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணிக்கெதிராக அதிரடியான ஆட்டத்தை விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக நிதானமாக விளையாடியது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 53 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...