Tamil cricket news: Cricket News & Match Updates
அக்சர் படேலை ஏன் ஒன்பதாவது இடத்தில் களமிறக்கினார்கள்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேள்வி!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 109/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா (60) அரை சதம் அடித்ததால், அந்த அணி முதல் நாள் முடிவில் 156/4 என இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் முதல் செஷனில் இந்திய ஸ்பின்னர்கள் மிரட்டலாக செயல்பட்டதால், அந்த அணி 197/10 ஆல்அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா (12), கில் (5), கோலி (13), ஷ்ரேயஸ் ஐயர் (26) போன்ற முன்னணி பேட்டர்கள் சொதப்பிய நிலையில், இறுதியில் சேத்தேஸ்வர் புஜாரா தனியொருவனாக நின்று 59 (142) ரன்களை குவித்து அசத்தினார். Read More...