Tamil cricket news: Cricket News & Match Updates
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் குறித்த பேச்சுகள் தொடங்கியதிலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியில் விளையாடும் சில வீரர்கள் சர்வதேச தொடர்களையும் புறக்கணித்து ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்திய அணியின் சில முக்கிய வீரர்கள் பிசிசிஐயின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செய்துவருவதுதான் ஆச்சரியமான விஷயம்.
அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் சொதப்பிய காரணத்தால், எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாட பிசிசிஐயால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் பிசிசிஐ-யின் எச்சரிக்கையையும் மீறி அவர் ரஞ்சி கோப்பை தொடரை புறக்கணித்து வந்தார். Read More...