Tamil cricket news: Cricket News & Match Updates
பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்!
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய் அகுஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஹாவும் 2ரன்களுகு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் 12 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, ரஷித் கான் மட்டும் ஓரளவு தக்குப்பிடித்து 31 ரன்களைச் சேர்த்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆளுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். Read More...