Tamil cricket news: Cricket News & Match Updates
பாகிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹாரிஸ் ராவுஃப் நம்பிக்கை!
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கார்டிஃபில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும் சூழலிலும், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற தொடரை இழப்பதிலிருந்து மீளும் சூழலிலும் களமிறங்கவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. Read More...