Mohammad nabi: Cricket News & Match Updates
எங்களுடைய ஆட்டம் எனக்கு திருப்தியளிக்கிறது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆறாவது போட்டி நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.
அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 92 ரன்களை குவித்து அசத்தினார். இதன் காரணமாக 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கான இதனை ஆஃப்கானிஸ்தான அணி விரட்டாது என்றே பலரும் நினைத்த வேளையில் 37.1 ஓவரில் 292 ரன்கள் அடித்தால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் என்கிற கட்டாயத்துடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான அணி துவக்கத்திலிருந்து அதிரடி காண்பித்தது. Read More...