David miller: Cricket News & Match Updates
குஜராஜ் டைட்டன்ஸ் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். Read More...